செய்திகள்

வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் ஓய்வு!

DIN

வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார், சர்வதேச மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

37 வயது வினய் குமார், இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 31 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2010-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். எனினும் 2013-க்குப் பிறகு இந்திய அணிக்காக விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

2004 முதல் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி வந்த வினய் குமார், கடைசியாக புதுச்சேரி அணி சார்பாகக் கடந்த வருடம் ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடினார். 139 ஆட்டங்களில் 504 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ரஞ்சி போட்டியில் 442 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார். (அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர்களில் நான்காம் இடம்.)

கர்நாடக அணிக்குத் தலைமை தாங்கி ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை, இராணி கோப்பை என மூன்று பட்டங்களையும் அடுத்தடுத்து இரு வருடங்களிலும் வென்று சாதனை படைத்தார் வினய் குமார். 

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி, கேகேஆர், மும்பை இந்தியன்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT