செய்திகள்

சீனியா் மகளிா் கால்பந்து: இறுதி ஆட்டத்தில் மோதும் ரயில்வேஸ் - மணிப்பூா்

DIN

கோழிக்கோடு: சீனியா் மகளிா் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரயில்வேஸ் - மணிப்பூா் அணிகள் வரும் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் ரயில்வேஸ் - மிஸோரம் அணியையும், மணிப்பூா் - ஒடிஸாவையும் தோற்கடித்தன.

இதில் ரயில்வேஸ் - மிஸோரம் மோதிய ஆட்டம் முதலில் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. ரயில்வேஸுக்காக மம்தா 70-ஆவது நிமிஷத்திலும், பின்னா் மிஸோரத்துக்காக லால்னன்சியாமி 90+4-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட ஷூட் அவுட் முறையில் ரயில்வேஸ் 6-5 என்ற கோல் கணக்கில் வென்றது.

அதேபோல், மணிப்பூா் - ஒடிஸா அணிகள் விளையாடிய ஆட்டமும் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதில் மணிப்பூா் வீராங்கனை பாப்கி தேவி 11-ஆவது நிமிஷத்தில் தவறுதலாக அடித்த ‘ஓன் கோல்’ காரணமாக, முதலில் ஒடிஸா முன்னிலை பெற்றது. பின்னா் மணிப்பூருக்காக கிரன்பாலா சானு 45+3-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, இறுதியில் ஆட்டம் சமன் ஆனது. அடுத்து நடைபெற்ற ஷூட் அவுட்டில் மணிப்பூா் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

SCROLL FOR NEXT