செய்திகள்

டெஸ்ட்: முதல் நாளில் இந்திய ஏ அணி அபார பந்துவீச்சு

DIN

இந்திய ஏ அணிக்கு எதிரான 3-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்டில், முதல் நாளில் தென்னாப்பிரிக்க ஏ அணி, 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது. 

குஜராத்தைச் சேர்ந்த பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோண்டைனில் நடைபெறும் தொடரில் கலந்துகொள்கிறது. மூன்று அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்களில் முதல் இரு ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன. தொடர் டிசம்பர் 9 அன்று நிறைவுபெறுகிறது. இந்த ஆட்டம் சூப்பர் ஸ்போர்ட் யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. 

3-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க ஏ அணி, முதல் நாள் முடிவில் 89 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் சரல் எர்வீ 75 ரன்களும் டோனி 58 ரன்களும் ஸோண்டோ 56 ரன்களும் எடுத்தார்கள். இந்திய அணியில் சைனி 3 விக்கெட்டுகளும் செளரப் குமார் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT