செய்திகள்

சஜித் கான் சுழலில் சிக்கிய வங்கதேசம்: மழை பாதிப்புக்கு மத்தியிலும் பாக். ஆதிக்கம்

DIN


பாகிஸ்தானுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. 

வங்கதேசம், பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் மிர்பூரில் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு நாள்களில் மழை பாதிப்பால் 63.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. 3-வது நாள் ஆட்டம் மழையால் முழுமையாகத் தடைபட்டது.

2 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்திருந்த பாகிஸ்தான் 4-ம் நாள் ஆட்டத்தைத் தொடங்கி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது பாகிஸ்தான்.

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 76 ரன்களும், அசார் அலி 56 ரன்களும், முகமது ரிஸ்வான் 53 ரன்களும், ஃபவாத் அலாம் 50 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசத்துக்கு பேட்டர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் சஜித் கான் சுழலில் வங்கதேச பேட்டர்கள் அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

4-ம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 76 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஃபாலோ ஆனை தவிர்க்க வங்கதேசத்துக்கு இன்னும் 24 ரன்கள் தேவைப்படுகிறது.

இதனால், கடைசி நாள் ஆட்டத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT