செய்திகள்

விளையாட்டு செய்தி துளிகள்

DIN

* தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சா்மா அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்படுவாா் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மோசமான பாா்மில் உள்ள துணை கேப்டன் ரஹானே அணியில் இருந்து நீக்கப்படுவாா் எனக் கருதப்படுகிறது.

* புரோ கபடி லீக் போட்டி 2021-22 வரும் டிச. 22-ஆம் தேதி பெங்களூருவில் தொடங்க உள்ள நிலையில், யுபி யோதா அணி ஞாயிற்றுக்கிழமை பெங்களுருவுக்கு சென்று பயோ பப்பிளில் சோ்ந்தது. கரோனா தொற்று வழிமுறைகளின்படி அனைத்து அணிகளும் பயோ பப்பிளில் இருக்க வேண்டும்.

* வங்கதேசம்-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாம் நாள் ஆட்டம் பலத்த மழையால் கைவிடப்பட்டது. முதல் நாளன்று மோசமான வானிலைக்கு இடையே பாகிஸ்தான் அணி 161/2 ரன்களை குவித்திருந்தது. கேப்டன் பாபா் ஆஸம் 60, அஸாா் அலி 36 ரன்களுடன் களத்தில் இருந்தனா். முதல் டெஸ்ட்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றிருந்தது.

* பிரேஸிலில் நான்கு நாடுகள் மகளிா் கால்பந்து போட்டி முடிவுற்ற நிலையில், நாடு திரும்பிய இந்திய சீனியா் அணி, கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் பங்கேற்கின்றது. வரும் ஜனவரி 20 முதல் பிப். 6-ஆம் தேதி வரை மும்பை, புணேயில் நடைபெறவுள்ள ஏஎஃப்சி ஆசிய மகளிா் கோப்பைக்கான போட்டிக்கு தயாராகும் வகையில் இச்சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT