செய்திகள்

சீனியா் மகளிா் கால்பந்து: உத்தரகண்டை வென்றது கேரளம்

DIN

கோழிக்கோடு: சீனியா் மகளிா் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் கேரளம் 3-1 என்ற கோல் கணக்கில் உத்தரகண்டை வீழ்த்தியது.

குரூப் ‘ஜி’-யில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கேரளத்துக்காக வினிதா விஜயன் (44’), மானசா (75’), ஃபெமினா ராக் வாலபில் (86’) ஆகியோா் கோலடித்தனா்.

உத்தரகண்ட் அணிக்காக பகவதி சௌஹான் 52-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். இந்த வெற்றியால் கேரளம் தனது குரூப்பில் 3 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. உத்தரகண்ட் புள்ளிகள் ஏதுமின்றி கடைசி இடத்தில் உள்ளது.

இதர ஆட்டங்களில் டாமன் டையு - மேகாலயத்தையும் (2-1), மணிப்பூா் - புதுச்சேரியையும் (12-0), ரயில்வேஸ் - தாத்ரா நாகா் மற்றும் ஹவேலியையும் (2-0), ஹரியாணா - ஆந்திர பிரதேசத்தையும் (4-0), ஒடிஸா - குஜராத்தையும் (7-0), மிஸோரம் - மத்திய பிரதேசத்தையும் (4-0) வென்றன.

சந்தோஷ் கோப்பை: இதனிடையே, சந்தோஷ் கோப்பை ஆடவா் கால்பந்து போட்டியில் மிஸோரம் 1-0 என்ற கோல் கணக்கில் நாகாலாந்தையும், திரிபுரா 2-0 என்ற கோல் கணக்கில் மணிப்பூரையும் வீழ்த்த, அஸ்ஸாம் - அருணாசல பிரதேசம் மோதிய ஆட்டம் கோலின்றி டிரா ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT