செய்திகள்

இளையோா் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் 8 இந்தியா்கள்

DIN

புது தில்லி: போலாந்தில் நடைபெறும் இளையோா் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய போட்டியாளா்கள் 8 போ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

அரையிறுதிச்சுற்றுகளில், மகளிருக்கான 48 கிலோ பிரிவில் கீதிகா 5-0 என்ற கணக்கில் இத்தாலியின் எரிகா பிரிசியான்டாரோவை வீழ்த்தினாா். வின்கா (60 கிலோ) கஜகஸ்தானின் ஜுல்டைஸ் ஷயாக்மிடோவாவை 4-1 என்ற கணக்கில் வென்றாா். அருந்ததி சௌதரி (69 கிலோ) உஸ்பெகிஸ்தானின் காதிசாபோனு அப்துல்லேவாவை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தாா்.

51 கிலோ பிரிவில் ஆசிய நடப்பு சாம்பியனான பேபிரோஜிசனா சானு 5-0 என்ற கணக்கில் இத்தாலியின் எலன் அயாரியை வென்றாா். பூனம் (57 கிலோ) அதே புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் சிதோரா டுா்டிபெகோவாவை வீழ்த்தினாா். சனாமாசா சானு (75 கிலோ) போலாந்தின் டரியா பராடாவை 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றாா். 81 கிலோவுக்கு அதிகமான பிரிவில் அல்ஃபியா பதான் 3-2 என்ற கணக்கில் போலாந்தின் ஒலிவியா டொபொரெக்கை தோற்கடித்தாா்.

ஆடவருக்கான 56 கிலோ பிரிவில் இந்திய வீரா் சச்சின், இத்தாலியின் மைக்கேல் பல்தாசியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். 64 கிலோ பிரிவில் அங்கித் நா்வால் 1-4 என்ற கணக்கில் கஜகஸ்தானின் சபிா்ஜான் அகாலிகோவிடமும், 49 கிலோ பிரிவில் விஷ்வமித்ர சாங்தோம் அதே புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தானின் சான்ஜாா் தாஷ்கென்பேயிடமும், 91 கிலோ பிரிவில் விஷால் குப்தா 0-5 என்ற கணக்கில் போலாந்தின் ஜாகுப் ஸ்ட்ராஸ்ஜீவ்ஸ்கியிடமும் வீழ்ந்து வெண்கலப் பதக்கம் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT