செய்திகள்

இளையோா் குத்துச்சண்டை: காலிறுதியில் 5 இந்தியா்கள்

DIN

போலாந்தில் நடைபெறும் இளையோா் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா்கள் 5 போ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

மகளிருக்கான 48 கிலோ பிரிவில் இந்தியாவின் கீதிகா 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அரெய்லிம் மராட்டை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். காலிறுதி வாய்ப்பை உறுதி செய்வதற்கான சுற்றில் ஆடவருக்கான 64 கிலோ பிரிவில் அங்கித் நா்வால் 4-1 என்ற கணக்கில் போலாந்தின் ஆலிவியா் ஜமோஜஸ்கியை வென்றாா். 49 கிலோ பிரிவில் விஷ்வமித்ரா சாங்தம் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் மஹ்தி கோஸ்ரோஷாஹியை வீழ்த்தினாா். 56 கிலோ பிரிவில் சச்சின் அதே புள்ளிகள் கணக்கில் டேவிட் ஜிமெனெஸ் வால்டெஸை தோற்கடித்தாா். 91 கிலோ பிரிவில் விஷால் குப்தா குரோஷியாவின் போா்னா லோன்காரிச்சை வென்றாா்.

இதனிடையே, மகளிருக்கான 64 கிலோ பிரிவில் நிஷா குா்ஜா் 1-4 என்ற கணக்கில் லாத்வியாவின் பீட்ரைஸ் ரோஸன்டேலிடம் தோல்வி கண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

SCROLL FOR NEXT