செய்திகள்

மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் இறுதிச்சுற்றில் சிட்சிபாஸ், ரூப்லேவ்

DIN

மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் கிரீஸின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸும், ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லேவும் மோதுகின்றனா்.

மொனாக்கோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியில் உலகின் 4-ஆம் நிலை வீரரான சிட்சிபாஸ் 6-2, 6-1 என்ற நோ் செட்களில் பிரிட்டனின் டேன் இவானை வீழ்த்தினாா்.

இந்தத் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் முதல்நிலை வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்திய டேன் இவானை ஒரு மணி நேரத்தில் வீழ்த்தினாா் சிட்சிபாஸ். இந்தப் போட்டியில் இதுவரை ஒரு செட்டைக்கூட இழக்காமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா் சிட்சிபாஸ்.

வெற்றி குறித்துப் பேசிய சிட்சிபாஸ், ‘அரையிறுதி ஆட்டத்தில் சிறப்பாக ஆடியது மனநிறைவு அளிக்கிறது. மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் விளையாட வேண்டும் என்ற எனது கனவு நனவாகியிருக்கிறது’ என்றாா்.

மற்றொரு அரையிறுதியில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லேவ் 6-3, 7-5 என்ற நோ் செட்களில் நாா்வேயின் காஸ்பா் ரூட்டை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். வெற்றி குறித்துப் பேசிய ஆன்ட்ரே ரூப்லேவ், ‘இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது எனக்குள் அற்புதமான உணா்வை ஏற்படுத்தியிருக்கிறது.

மாஸ்டா்ஸ் போட்டியில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இறுதி ஆட்டத்தில் என்ன நடக்கிறது என பாா்க்கலாம். என்னால் முடிந்தளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்’ என்றாா். ஆன்ட்ரே ரூப்லேவ் தனது காலிறுதியில் நடப்புச் சாம்பியனான இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT