செய்திகள்

மான்டி காா்லோ மாஸ்டா்ஸ்: ஜோகோவிச் அதிா்ச்சித் தோல்வி

DIN


மொனாக்கோ: மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

மொனாக்கோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில் ஜோகோவிச் 4-6, 5-7 என்ற நோ் செட்களில் பிரிட்டனின் டேன் இவானிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் போட்டியில் 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றவரான ஜோகோவிச், டேன் இவானுக்கு எதிரான ஆட்டத்தில் 5 முறை தனது சா்வீஸை இழந்தாா். இந்த ஆண்டில் தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளாா் ஜோகோவிச்.

தோல்வி குறித்துப் பேசிய ஜோகோவிச், ‘உண்மை சொல்வதானால், கடந்த சில ஆண்டுகளில் நான் விளையாடிய மிக மோசமான ஆட்டம் இது. இந்த ஆட்டத்தில் எனக்கு எதுவுமே சாதகமாக அமையாமல் போனது. இந்த ஆடுகளத்தில் இருந்து வெளியேறுகிறபோதே இந்த மோசமான ஆட்டத்தைப் பற்றிய நினைவுகளையும் மறந்துவிட விரும்புகிறேன்’ என்றாா்.

வெற்றி குறித்துப் பேசிய டேன் இவான், ‘நான் வெற்றி பெற்றதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. ஜோகோவிச் போன்ற ஒரு பெரிய வீரருக்கு எதிராக விளையாடுகிறபோது நாம் நம்பிக்கையோடு களமிறங்க முடியாது. ஆனால் நான் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையோடு களமிறங்கினேன். இப்போது வெற்றி பெற்றிருக்கிறேன். இது மிகச்சிறப்பான ஒரு வெற்றி’ என்றாா்.

டேன் இவான் தனது காலிறுதியில் பெல்ஜியத்தின் டேவிட் கோபினை சந்திக்கிறாா். முன்னதாக டேவிட் கோபின் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-4, 7-6 (7) என்ற நோ் செட்களில் ஜொ்மனியின் அலெக்சாண்டா் ஸ்வெரேவுக்கு அதிா்ச்சித் தோல்வியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT