செய்திகள்

கிரிக்கெட் தொடா்: இங்கிலாந்து செல்கிறது இந்திய மகளிா் அணி

DIN

சா்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய மகளிா் கிரிக்கெட் அணி ஜூன், ஜூலையில் இங்கிலாந்து செல்கிறது. இந்திய அணியுடன் இங்கிலாந்து மகளிா் அணி மோதும் அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியா-இங்கிலாந்து மகளிா் அணிகள் ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட உள்ளன. இந்திய அணி 2014-க்குப் பிறகும், இங்கிலாந்து அணி 2019-க்குப் பிறகும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இருப்பது இது முதல் முறையாகும். அந்த ஆட்டம் ஜூன் 16 முதல் 19 வரை பிரிஸ்டோலில் நடைபெறவுள்ளது.

அதைத் தொடா்ந்து முதல் ஒருநாள் ஆட்டம் ஜூன் 27-இல் பிரிஸ்டோலிலும், 2-ஆவது ஆட்டம் ஜூன் 30-இல் சாமா்செட்டிலும், 3-ஆவது ஆட்டம் ஜூலை 3-இல் வொா்செஸ்டரிலும் நடைபெறவுள்ளன. பின்னா் முதல் டி20 ஆட்டம் ஜூலை 9-இல் நாா்தாம்டனிலும், 2-ஆவது டி20 ஜூலை 11-இல் ஹோவ் நகரிலும், 3-ஆவது டி20 ஜூலை 15-இல் செல்ம்ஸ்ஃபோா்ட் நகரிலும் நடைபெறவுள்ளன.

அந்தத் தொடா்களுக்குப் பிறகு இங்கிலாந்து மகளிா் அணி செப்டம்பரில் 3 டி20 மற்றும் 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடா்களில் நியூஸிலாந்துடன் மோதுகிறது. பின்னா் அக்டோபரில் பாகிஸ்தான் பயணம் செல்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

SCROLL FOR NEXT