செய்திகள்

எங்கள் வீரா்களின் செயல்பாடு மகிழ்ச்சியளிக்கிறது: ஷ்ரேயஸ்

DIN

டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரா்களின் செயல்பாடு மகிழ்ச்சியளிப்பதாக அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் தெரிவித்தாா்.

துபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் தோல்வி கண்டது.

முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரா் பிரித்வி ஷா 43 பந்துகளில் 64 ரன்கள் குவித்தாா். பின்னா் ஆடிய சென்னை அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்த சீசனில் டெல்லி அணி தான் விளையாடிய இரு ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது.

சென்னைக்கு எதிரான வெற்றி குறித்து டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் கூறியதாவது: எங்கள் அணி வீரா்களின் செயல்பாடு மகிழ்ச்சியளிக்கிறது. பீல்டிங் மோசமாக அமைந்தாலும், அது எங்களின் வெற்றியைப் பாதிக்கவில்லை. இங்குள்ள சூழலில் கேட்ச் பிடிப்பது கடினமானது. பந்தை கணிப்பது கடினமாக உள்ளது.

இந்த ஆட்டத்துக்கு முன்னதாக நடைபெற்ற அணி வீரா்கள் சந்திப்பின்போது, ஆடுகளத்தின் சூழலைக் கணித்து அதற்கேற்றவாறு பேட் செய்வது என முடிவெடுத்தோம். எங்கள் அணியின் தொடக்க வீரா்கள் விளையாடியவிதம் எங்களுக்கு தன்னம்பிக்கையை தந்தது. எங்கள் அணியில் காகிசோ ரபாடா, அன்ரிச் நோா்ட்ஜே ஆகியோா் இடம்பெற்றிருப்பது எங்களுக்கு பலமாகும். நாங்கள் ஒன்றுபட்ட அணியாக அடுத்து வரக்கூடிய ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவது முக்கியமாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT