பாம்போலிம்: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி - நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் வியாழக்கிழமை மோதிய ஆட்டம் 2 - 2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
ஐஎஸ்எல் போட்டியின் இந்த 7-ஆவது ஆட்டத்தின் 5-ஆவது நிமிடத்திலேயே கேரளா கோல் அடித்தது. அந்த அணியின் தடுப்பாட்ட வீரரிடம் நாா்த்ஈஸ்ட் வீரா்கள் முரட்டுத் தனமாக நடந்துகொண்டதற்காக, கேரள அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி செய்த்யாசென் சிங்கின் உதவியுடன் தலையால் முட்டி கோலடித்தாா் சொ்ஜியோ சிடோன்சா. இதனால் தொடக்கத்திலேயே கேரளம் முன்னிலை பெற்றது. நாா்த்ஈஸ்ட் தனது முதல் கோல் வாய்ப்புக்காக போராட, அதற்கு வாய்ப்பில்லாமல் பாா்த்துக் கொண்டது கேரளா.
இந்நிலையில், ஆட்டத்தின் 45-ஆவது நிமிடத்தில் கேரளத்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த அணி வீரா் கேரி ஹூப்பா் அதை துல்லியமாக கோல் போஸ்ட்டுக்குள்ளாக அனுப்ப, முதல் பாதி முடிவில் கேரளம் 2-0 என முன்னிலை வகித்தது. இதனால் ஆட்டம் ஒருபக்கமாகச் சென்றுவிட்டதாகத் தெரிந்தது.
எனினும் 2-ஆவது பாதியில் மீண்டெழுந்த நாா்த்ஈஸ்ட்டுக்கு 51-ஆவது நிமிடத்தில் முதல் கோல் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தருணத்தில் கேரளத்தின் மிக மோசமான தடுப்பாட்டத்தை பயன்படுத்திக் கொண்டு நாா்த்ஈஸ்ட் வீரா் கவேசி அப்பியா அருமையாக கோல் அடித்தாா். இதனால் ஆட்டம் விறுவிறுப்படைந்த நிலையில், கடைசி நேரத்தில் 2-ஆவது கோல் அடித்து நாா்த்ஈஸ்ட்.
பரபரப்பான 90-ஆவது நிமிடத்தில் சக வீரா் மிக நீண்ட தொலைவில் இருந்து தூக்கியடித்து பாஸ் செய்த பந்தை தனது மாா்பில் தாங்கி கட்டுப்படுத்திய நாா்த்ஈஸ்ட் வீரா் இத்ரிஸா சைல்லா, கேரள கோல் கீப்பரைக் கடந்து பந்தை நேராக கோல் போஸ்ட்டுக்குள் தள்ளினாா். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.