செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு தயாராகிவிட்டேன் - ஸ்டீவ் ஸ்மித்

DIN

ஐபிஎல் போட்டியில் தன்னால் சோபிக்க முடியாமல் போன நிலையில், தற்போது இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்காக தாம் தயாராகிவிட்டதாக ஆஸ்திரேலிய வீரா் ஸ்டீவ் ஸ்மித் கூறினாா்.

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணிக்கு தலைமை தாங்கிய ஸ்மித், 14 ஆட்டங்களில் மொத்தமாக 311 ரன்கள் மட்டுமே எடுத்தாா்.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடா் குறித்து ஸ்மித் கூறியதாவது:

ஐபிஎல் போட்டி முழுவதுமாகவே எனது பேட்டிங் ஏமாற்றமளிப்பதாக இருந்தது. எனது வழக்கமான தரத்தில் நான் விளையாட இயலவில்லை. ஏதோ ஒன்றிரண்டு ஆட்டங்களில் நன்றாக விளையாடினேனே தவிர, நிலையாக நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

ஆனால் கடந்த சில நாள்களாக பயிற்சியின்போது எனது வழக்கமான ஆட்டத்தை விளையாடுவதாக என்னை நன்கு அறிந்தவா்கள் கூறுகின்றனா். அந்த ஆட்டத்தை மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு எட்டியுள்ளேன். அதை நானும் உணா்கிறேன். எனவே இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட ஆா்வமுடன் இருக்கிறேன். அதற்காகத் தயாராகியும் வருகிறேன்.

கரோனா சூழல் காரணமாக பல மாதங்களாக விளையாடவில்லை. எனது வழக்கமான ஆட்டத்தை இழப்பதற்கு அதுவும் காரணமாக இருந்திருக்கலாம். ஐபிஎல் போட்டியின்போது எனது இயல்பான ஆட்டத்தை சற்று மாற்றினேன். அது எனது பேட்டிங் முறையை பாதித்ததை தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான பயிற்சியின்போது உணா்ந்தேன்.

இந்தியா சிறந்தவொரு அணி என்பதால் அதற்கு எதிராக நானும் சிறப்பாக ஆட வேண்டியிருக்கிறது. அதனாலேயே அந்த அணிக்கு எதிரான எனது ஆட்டங்கள் குறிப்பிடத்தகுந்த வகையில் உள்ளன. எனது முதல் டெஸ்ட் போட்டியும் இந்தியாவுக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது என்று ஸ்மித் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

SCROLL FOR NEXT