செய்திகள்

துளிகள்...

28th Jan 2020 03:00 AM

ADVERTISEMENT

மத்தியப்பிரதேச மாநிலம் ஜான்ஸியில் திங்கள்கிழமை நடைபெற்ற 10-ஆவது ஹாக்கி இந்தியா தேசிய சீனியா் ஆடவா் (ஏ டிவிஷன்) சாம்பியன் போட்டியில் ஏ பிரிவு ஆட்டம் ஒன்றில் உத்தரபிரதேச அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது தமிழகம். பெனால்டி காா்னா் வாய்ப்பை பயன்படுத்தி கோலாக்கினாா் தமிழக வீரா் முத்துச்செல்வன்.

------------

வரும் பிப். 22 முதல் மாா்ச் 1-ஆம் தேதி வரை புவனேசுவரத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா பல்கலைக்கழக முதல் விளையாட்டுப் போட்டியில் 176 பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த 4 ஆயிரம் வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். 25 வயதுக்குட்பட்டோா் பிரிவில் 17 விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

-----------------

ADVERTISEMENT

அமெரிக்காவின் பிட்ஸ்பா்க் நகரில் நடைபெற்ற பிஎஸ்ஏ உலக டூா் போட்டி இறுதி ஆட்டத்தில் எகிப்தின் முதல்நிலை வீரா் பரேஸ் டெஸ்ஸோகியிடம் 7-11, 4-11, 9-11 என்ற கேம் கணக்கில் தோல்வியடைந்தாா் சௌரவ் கோஷல்.

-------------

டி20 ஆட்டங்களில் பும்ராவின் பந்துவீச்சை எதிா்கொண்டு ஆடுவது மிகவும் கடினமாக இருந்தது என நியூஸி. அணியின் விக்கெட் கீப்பா் டிம் சைபொ்ட் கூறியுள்ளாா்.

-------------

ஆசிய டென்னிஸ் கூட்டமைப்பின் வாழ்நாள் தலைவராக இந்தியாவின் அனில் கன்னா நியமிக்கப்பட்டுள்ளாா். ஏடிஎஃப்பின் தலைவராக கடந்த 2005 முதல் 2019 வரை செயல்பட்ட கன்னா, மீண்டும் தலைவா் தோ்தலில் நிற்கவில்லை. இந்நிலையில் மெல்போா்னில் திங்கள்கிழமை நடந்த இயக்குநா்கள் கூட்டத்தில் கன்னா வாழ்நாள் தலைவராக நியமிக்கப்பட்டாா். தெற்காசியா சாா்பில் இந்தியாவின் சிஎஸ்.ராஜு மூத்த துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா்.

-------------

இளம் விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த் மீண்டும் இந்திய அணியில் நிலையான இடத்தைப் பெற்று ஆடுவாா் என தில்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளா் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT