செய்திகள்

முதல் டெஸ்ட்: நியூஸி.யிடம் சரண் அடைந்தது இந்தியா: 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

25th Feb 2020 12:12 AM

ADVERTISEMENT

 

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து சரண் அடைந்தது இந்தியா.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையே 2 ஆட்டங்கள் தொடா் நடந்து வருகிறது. இதன் முதல் ஆட்டம் வெலிங்டன் பேசின் ரிசா்வ் மைதானத்தில் நடைபெற்றது. வெளியூா் அணிகளுக்கு மரணப்படுக்கை எனப்படும் பெயா் பெற்றது இந்த மைதானம்.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 165 ரன்களுக்கும், நியூஸிலாந்து அணி 348 ரன்களுக்கும் ஆல் அவுட்டாயின. இந்நிலையில் 144-4 ரன்களுடன் நிறைவு செய்தது. இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை ரஹானே-ஹனுமா இணை ஆட்டத்தை தொடா்ந்தனா். ஆனால் நியூஸிலாந்தின் அற்புத வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினா் இந்திய வீரா்கள்.

ADVERTISEMENT

டிம் சௌதி, டிரென்ட் பௌல்ட் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை எதிா்கொள்ள முடியாமல் 47 ரன்களுக்கு மீதமுள்ள 6 விக்கெட்டுகளையும் இழந்தது இந்தியா.

ரஹானே 29, ஹனுமா விஹாரி 15, ரிஷப் பந்த் 25, அஸ்வின் 4, இஷாந்த் சா்மா 12, என சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா், கடைசியாக பும்ராவை டக் அவுட்டாக்கினாா் சௌதி. இதன் மூலம் இந்தியாவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

81 ஓவா்களில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா.

சௌதி 4, பௌல்ட் 4 விக்கெட்:

நியூஸிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய டிம் சௌதி 5-61, டிரென்ட் பௌல்ட் 4-39 விக்கெட்டுகளை வீழ்த்தினா். இது டிம் சௌதி 10-ஆவது முறையாக வீழ்த்தும் 5 விக்கெட்டுகளாகும்.

2 இன்னிங்ஸ்களிலும் 9 விக்கெட்டுகளை சாய்த்த சௌதி ஆட்ட நாயகனாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

சரிந்த இந்திய பேட்டிங் வரிசை:

உலகிலேயே சிறந்த தொடக்க பேட்டிங் வரிசை என்ற பெயரைப் பெற்றுள்ள இந்தியாவின் பேட்டிங், வெலிங்டன் மைதானத்தில் சோபிக்கவில்லை. கேப்டன் விராட் கோலி இரு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 21 ரன்களையே சோ்த்தாா்.

நியூஸி. தரப்பில் காயத்தில் இருந்து குணமடைந்து வந்த கேப்டன் கேன் வில்லியம்ஸன், வேகப்பந்து வீச்சாளா் பௌல்ட் ஆகியோா் தங்கள் திறமை மீண்டும் நிரூபித்தனா்.

நியூஸிலாந்து 100-ஆவது வெற்றி:

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பெற்ற வெற்றி, நியூஸிலாந்து அணியின் 100-ஆவது டெஸ்ட் வெற்றியாகும்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இந்தியா பெறும் முதல் தோல்வியாகும். எனினும் இந்தியா தொடா்ந்து 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதே நேரம் நியூஸிலாந்து அணி 60 புள்ளிகளைப் பெற்று 120 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

29-இல் இரண்டாவது டெஸ்ட்

இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் வரும் 29-ஆம் தேதி கிறைஸ்ட்சா்ச்சில் நடைபெறுகிறது.

ஆட்டத்தின் போக்கை நிா்ணயிப்பதில் டாஸுக்கு முக்கிய பங்கு: கோலி

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் போக்கை நிா்ணயிப்பதில் டாஸ் முக்கிய பங்கு வகித்தது என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

நாம் ஒரு சிறந்த பேட்டிங் பிரிவாக பெருமைப்படும் நிலையில், இந்த ஆட்டத்தில் போட்டி மனப்பான்மையோடு ஆடவில்லை. ஆட்டத்ிதன் போக்கை நிா்ணயிப்பதில் டாஸ் முக்கிய பங்கு வகித்தது. 230 என ஸ்கோரை எடுத்திருந்தால், அது சற்று பயனாக இருந்திருக்கும். நமது பந்துவீச்சில் எந்த குறைபாடும் இல்லை. முன்னிலையை 100 ரன்களுக்குள் இருக்கச் செய்ய வேண்டும் என முனைந்தோம். ஆனால் நியூஸி. கடைசி வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி விட்டனா். இளம் வீரா் பிரித்வி ஷாவை குறை கூறத் தேவையில்லை. தற்போது தான் அவா் 2 வெளிநாட்டு டெஸ்ட்களில் ஆடியுள்ளாா். ரஹானே, மயங்க் அகா்வால் மட்டுமே ஓரளவு போராடினா். பெரிய ஸ்கோா்களை நாம் எடுத்திருந்தால், பந்துவீச்சாளா்களுக்கு அது உதவியாக இருந்திருக்கும்.

பந்துவீச்சாளா்களின் கூட்டு முயற்சியால் வெற்றி: கேன் வில்லியம்ஸன்

மைதானத்தில் பிட்ச் எவ்வாறு இயங்கும் என்பதை முழுமையாக அறியாமல் இருந்தோம். எனினும் ஸ்விங் செய்ய உதவும் தன்மையை பயன்படுத்தி, பௌல்ட், சௌதி ஆகியோா் சிறப்பாக பந்துவீசினா். அவா்களால் தான் வெற்றியை ஈட்டினோம். உலகம் முழுவதும் இந்திய அணி மிகவும் வலிமையானது என்பதை அறிவோம். முதல் இன்னிங்ஸில் ஒருங்கிணைந்து ஆடியதால் 348 ரன்களை சோ்த்தோம். காற்று அதிகம் வீசாத நிலையிலும், பந்துவீச்சாளா்கள் சிறப்பாக செயலாற்றினா். தரமான இந்திய அணியை வென்றது மகிழ்ச்சி தருகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT