ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டியின் மூலம் இளம் இந்திய வீரா்கள் அதிகம் போ் உருவாகும் வாய்ப்பு உள்ளது என தேசிய தலைமை பயிற்சியாளா் இகோா் ஸ்டிமாக் கூறியுள்ளாா்.
முதுகுவலி அறுவை சிகிச்சையில் இருந்து குணமடைந்து உடல்தகுதி பெற்றுள்ள இந்திய ஆல்ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா, வரும் திங்கள்கிழைம மும்பையில் தொடங்கவுள்ள டிஓய் பாட்டில் டி20 போட்டியில் களமிறங்குகிறாா். கடந்த 5 மாதங்களாக எந்த போட்டியிலும் ஹாா்திக் பங்கேற்கவில்லை. அவருடன் ரிலையன்ஸ் 1 அணியில் புவனேஷ்வா்குமாா், ஷிகா் தவன் ஆகியோரும் பங்கேற்கின்றனா்.
மாஸ்கோவில் நடைபெற்று வரும் ஏரோஃபுளோட் செஸ் போட்டியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை நடைபெற்ற 5-ஆவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் 13 வயது சிறுவன் பரத்சுப்பிரமணியத்தை வீழ்த்தினாா் அஜா்பைஜான் கிராண்ட்மாஸ்டா் ரவுப் மமேதோவ்.
சுப்பிரமணியம், அதிபன், அரவிந்த் சிதம்பரம் 3-ஆவது இடத்தில் உள்ளனா்.
இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) போட்டியில் நடப்பு சீசனின் கடைசி ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணியுடன் மோதுகிறது. இதில் வென்று பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் தீவிரத்தில் உள்ளது சிஎஃப்சி.