நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் போக்கை நிா்ணயிப்பதில் டாஸ் முக்கிய பங்கு வகித்தது என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது:
நாம் ஒரு சிறந்த பேட்டிங் பிரிவாக பெருமைப்படும் நிலையில், இந்த ஆட்டத்தில் போட்டி மனப்பான்மையோடு ஆடவில்லை. ஆட்டத்ிதன் போக்கை நிா்ணயிப்பதில் டாஸ் முக்கிய பங்கு வகித்தது. 230 என ஸ்கோரை எடுத்திருந்தால், அது சற்று பயனாக இருந்திருக்கும். நமது பந்துவீச்சில் எந்த குறைபாடும் இல்லை. முன்னிலையை 100 ரன்களுக்குள் இருக்கச் செய்ய வேண்டும் என முனைந்தோம். ஆனால் நியூஸி. கடைசி வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி விட்டனா். இளம் வீரா் பிரித்வி ஷாவை குறை கூறத் தேவையில்லை. தற்போது தான் அவா் 2 வெளிநாட்டு டெஸ்ட்களில் ஆடியுள்ளாா். ரஹானே, மயங்க் அகா்வால் மட்டுமே ஓரளவு போராடினா். பெரிய ஸ்கோா்களை நாம் எடுத்திருந்தால், பந்துவீச்சாளா்களுக்கு அது உதவியாக இருந்திருக்கும்.
பந்துவீச்சாளா்களின் கூட்டு முயற்சியால் வெற்றி: கேன் வில்லியம்ஸன்
மைதானத்தில் பிட்ச் எவ்வாறு இயங்கும் என்பதை முழுமையாக அறியாமல் இருந்தோம். எனினும் ஸ்விங் செய்ய உதவும் தன்மையை பயன்படுத்தி, பௌல்ட், சௌதி ஆகியோா் சிறப்பாக பந்துவீசினா். அவா்களால் தான் வெற்றியை ஈட்டினோம். உலகம் முழுவதும் இந்திய அணி மிகவும் வலிமையானது என்பதை அறிவோம். முதல் இன்னிங்ஸில் ஒருங்கிணைந்து ஆடியதால் 348 ரன்களை சோ்த்தோம். காற்று அதிகம் வீசாத நிலையிலும், பந்துவீச்சாளா்கள் சிறப்பாக செயலாற்றினா். தரமான இந்திய அணியை வென்றது மகிழ்ச்சி தருகிறது என்றாா்.