செய்திகள்

ஆஸ்திரேலிய ஏ அணியுடன் இந்தியா விளையாடும் பயிற்சி ஆட்டம்: நாளை தொடங்குகிறது

DIN

சிட்னியில் இந்தியா - ஆஸ்திரேலியா ஏ அணிகள் விளையாடும் மூன்று நாள் பயிற்சி ஆட்டம் நாளை தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் முதல் டி20 ஆட்டத்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2-வது டி20 ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. அதற்கு முன்பு இந்திய அணி இரு மூன்று நாள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் நாளை சிட்னியில் தொடங்குகிறது.

இதற்கான ஆஸ்திரேலிய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டிராவிஸ் ஹெட் தலைமையிலான அணியில் ஜோ பர்ன்ஸ், கேம்ரூன் கிரீன், டிம் பெயின், ஜேம்ஸ் பேட்டின்சன் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

நாளை 2-வது டி20 ஆட்டம் நடைபெறுவதால் கோலி, ராகுல், பும்ரா, ஷமி போன்ற வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் இடம்பெற மாட்டார்கள். ரஹானே, புஜாரா, விஹாரி, மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, ஷுப்மன் கில், அஸ்வின், ரிஷப் பந்த், சஹா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், சைனி, சிராஜ் போன்ற இந்திய வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT