உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: சுஷில் குமார் தோல்வி

கஜகஸ்தானில் நடைபெற்றுவரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவு முதல் சுற்றிலேயே இந்திய வீரர் சுஷில் குமார் தோல்வி அடைந்தார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: சுஷில் குமார் தோல்வி


கஜகஸ்தானில் நடைபெற்றுவரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவு முதல் சுற்றிலேயே இந்திய வீரர் சுஷில் குமார் தோல்வி அடைந்தார்.
8 ஆண்டுகளுக்கு பிறகு அவர் உலக சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டார்.
நுர்-சுல்தான் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 74 கிலோ எடை ஃப்ரீஸ்டைல் பிரிவில் அஸர்பைஜான் வீரர் கத்ஷிமுரத் கத்ஷியேவிடம் 9-11 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றார் சுஷில்.
காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்றவரான சுமித் மாலிக் 125 கிலோ எடைப் பிரிவில் முதல் சுற்றில் பங்கேற்று, ஹங்கேரி வீரர் டேனியல் லிகேட்டியிடம் 0-2 என்ற புள்ளிக் கணக்கில் சரணடைந்தார். கொரிய வீரர் சுயி சங்ஜாவை 12-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீரர் பர்வீன் ராணா முன்னேறினார்.
எனினும், உக்ரைன் வீரர் லியுபோமியிரிடம் 0-8 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்ததை அடுத்து காலிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை பர்வீன் ராணா இழந்தார்.
இவர், 92 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார்.
70 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் இந்திய வீரர் கரன் மோர் 0-7 என்ற புள்ளிக் கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீரர் இக்தியோர் நவ்ருúஸாவிடம் தோல்வி அடைந்தார்.
சுஷில் குமாரும், கரன் மோரும் மற்ற வீரர்களின் வெற்றி, தோல்வி அடிப்படையில் பதக்கம் வெல்லவும் ஒரு வாய்ப்புள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com