அந்த நாள் ஞாபகம்..!

2007ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில், செப்டம்பர் 19-ஆம் தேதி, குரூப் பிரிவு ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்தை எதிர்கொண்டு இந்தியா விளையாடிது. 
அந்த நாள் ஞாபகம்..!


2007ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில், செப்டம்பர் 19-ஆம் தேதி, குரூப் பிரிவு ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்தை எதிர்கொண்டு இந்தியா விளையாடிது. 
19ஆவது ஓவரை ஸ்டூவர்ட் பிராட் வீசினார். அந்த ஓவரில் அனைத்து பந்துகளையும் பவுண்டரி எல்லைக்கு வெளியே பறக்கவிட்டார் யுவராஜ் சிங். மறுமுனையில் அவருடன் தோனி இருந்தார். 
அந்த ஆட்டத்தில் 12 பந்துகளில் அரை சதமும் பதிவு செய்தார் யுவராஜ். அந்த நாளைக் கொண்டாடும் வகையில் பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் 6 சிக்ஸர்களை பறக்கவிடும் யுவராஜின் புகைப்படங்களை வெளியிட்டு கௌரவம் செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாளாயிற்றே! அந்த ஆட்டத்தில் மட்டுமல்ல; அந்த உலகக் கோப்பையையும் இந்திய அணியே வென்றது.
கடந்த ஜூன் 10ஆம் தேதி அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் யுவராஜ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com