அணியின் கேப்டன் பதவி தனது பேட்டிங் திறனை பாதிக்குமா எனத் தெரியவில்லை என தென்னாப்பிரிக்காவின் குயிண்டன் டி காக் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: இந்த பதவி எனது கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய மைல்கல். கூடுதல் பொறுப்பை ஏற்படுத்தியுள்ளது. டூபிளெஸ்ஸிஸ், டி வில்லியர்ஸ் இருவரும் பலமுறை எனது ஆட்டத்துக்கு வழிகாட்டியுள்ளனர். தலைமைப் பொறுப்பில் இருந்து இளம் வீரர்களுக்கு தேவையான ஆலோசனைகளை தருவேன். முதல் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது வருத்தமாக உள்ளது.
ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் பட்டம் வென்றது மிகப்பெரிய நிகழ்வாகும். ரபாடா-கோலி இடையில் ஆரோக்கியமான போட்டி நிலவும் என்றார்.