ஐபிஎஸ்எப் உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் 22-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் நட்சத்திர வீரர் பங்கஜ் அத்வானி.
இந்தியாவின் நிலையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பங்கஜ் அத்வானி, மியான்மரின் மண்டாலே நகரில் நடைபெற்ற உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்று ஆடி வருகிறார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் உள்ளூர் வீரர் நே தவே ஓவை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றார்.
கடந்த 2003-இல் இருந்து 34 வயதான பங்கஜ் வெல்லும் 22-ஆவது உலக சாம்பியன் பட்டமாகும். ஒவ்வொரு முறை உலகப் போட்டியில் பங்கேற்கும் போது, எனது ஆர்வம் மங்கவில்லை. தொடர்ந்து நாட்டுக்காக வெல்ல வேண்டும் என்ற ஊக்கம் அதிகரித்து வருகிறது என்றார் பங்கஜ்.