பிரிட்டனில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான கவுன்டி கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே சதம் பதிவு செய்தார்.
இதன்மூலம், கவுன்டி கிரிக்கெட்டில் முதல் ஆட்டத்திலேயே சதம் பதிவு செய்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஹாம்ஷயர் அணிக்காக விளையாடிய ரஹானே, நாட்டிங்ஹாம்ஷயர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 260 பந்துகளில் 119 ரன்கள் எடுத்தார்.
கிரிக்கெட் இணையதளத்துக்கு அவர் பின்னர் அளித்த பேட்டியில், "எனது ஆட்டத்துக்காக நான் மகிழ்ச்சி கொள்கிறேன். சதங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.
மிடில் ஆர்டரில் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்றார் ரஹானே.
இதற்கு முன்பு கவுன்டி கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே பியூஷ் சாவ்லாவும், முரளி விஜயும் சதம் பதிவு செய்தனர்.