உலகக் கோப்பையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்

மூன்றாவது முறையாக உலகக் கோப்பையில் விளையாட எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன் என்று தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீரர் ஹசீம் ஆம்லா தெரிவித்துள்ளார்.

மூன்றாவது முறையாக உலகக் கோப்பையில் விளையாட எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன் என்று தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீரர் ஹசீம் ஆம்லா தெரிவித்துள்ளார்.
ஐசிசி இணையதளத்தில் வெளியான அவரது பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது:
என்ன நடக்கும் என்பது தெரியாது. ஆனால், நல்லது நடக்கும் என்பதை மட்டும் அறிவேன். சில காரணங்களால் ஒரு சில போட்டிகளில் அணியில் இடம்பெற முடியாமல் போய்விட்டது. தற்போது, மீண்டும் இடம்பெற்றுவிட்டேன். எனது அணியின் ஜெர்ஸியை அணிவது எனக்கு பெருமை. 2019 உலகக் கோப்பை எனக்கு மூன்றாவது உலகக் கோப்பை போட்டியாகும். இந்தப் போட்டி எப்படி இருக்கும் என்பதை அறிவேன். இங்கிலாந்தின் சூழலும் எனக்கு தெரியும். அங்கு என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்.  அண்மையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற சில ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். அணிக்காக வீரர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள் என்றார் ஆம்லா.
மே 30ஆம் தேதி தொடங்கும் முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது தென்னாப்பிரிக்கா.
சர்வதேச கிரிக்கெட்டில் 18,000 ரன்களுக்கும் மேல் குவித்திருக்கிறார் 36 வயது ஆம்லா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com