பிரிட்டீஷ் ஓபன் ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோஷ்னா

பிரிட்டீஷ் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அதேநேரம், ஆடவர் பிரிவில், இந்திய வீரர் சௌரவ் கோஷல்,
பிரிட்டீஷ் ஓபன் ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோஷ்னா

பிரிட்டீஷ் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அதேநேரம், ஆடவர் பிரிவில், இந்திய வீரர் சௌரவ் கோஷல், ரமித் டண்டன் ஆகியோர் தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
ஹல் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் 12-10, 11-3, 11-9 என்ற கணக்கில் இங்கிலாந்து வீராங்கனை மிலி தாம்லின்சனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ஜோஷ்னா.
சர்வதேச தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள இங்கிலாந்து வீராங்கனை சாரா ஜேன் பெர்ரியை வியாழக்கிழமை அவர் எதிர்கொள்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com