பிசிசிஐ அமைப்புக்கு அக்.22இல் தேர்தல் 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) அக்டோபர் 22ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அந்த அமைப்பின் நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் தெரிவித்தார்.
பிசிசிஐ அமைப்புக்கு அக்.22இல் தேர்தல் 


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) அக்டோபர் 22ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அந்த அமைப்பின் நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் தெரிவித்தார்.
நிர்வாக சீர்திருத்தம் தொடர்பான லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தாமல், நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதாகக் கூறி, பிசிசிஐ தலைவராக இருந்த அனுராக் தாக்குர், அந்த அமைப்பின் செயலர் அஜய் ஷிர்கே ஆகியோரை உச்சநீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு அதிரடியாக நீக்கியது. அதைத் தொடர்ந்து, பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவராக முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராயை உச்சநீதிமன்றம் நியமித்தது.
சி.கே.கன்னா, பிசிசிஐ அமைப்பின் தற்காலிக தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், வினோத் ராய், நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் தில்லியில் செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார். இதுகுறித்து வினோத் ராய் கூறுகையில், லோதா பரிந்துரைகளை மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஏற்குமாறு செய்ய வேண்டும் என்பதே எங்களின் பிரதான பணி. அதை செய்து முடிப்போம். மாநில கிரிக்கெட் சங்கங்களின் தேர்தலை செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும். பிசிசிஐ அமைப்புக்கு  அக்டோபர் 22ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும்  என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com