கிரிக்கெட் உலகின் பெரிய போட்டியாக உள்ளது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையாகும். கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. கிரிக்கெட் வீரர்களும் பிசிசிஐயும் இதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.