யுவராஜ் சிங் ஓய்வு?

இந்திய அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.
யுவராஜ் சிங் ஓய்வு?

இந்திய அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.
பஞ்சாபைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான யுவராஜ் சிங், கடந்த 2011-உலகக் கோப்பையில் இந்தியா கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார். ஒருநாள், டி 20 ஆட்டங்களில் அபாரமாக ஆடிய நிலையில், புற்றுநோய் பாதிப்பால்,அவர் கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்து சிறிது சிறிதாக விலகினார்.
ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் இடம் பெற்று ஆடிய யுவராஜ் சிங், சர்வதேச, முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாடு டி20 லீக் போட்டிகளில் பங்கேற்று ஆட பிசிசிஐ தடையில்லா சான்று கோரவும் உள்ளதாக கூறியுள்ளார்.
ஜிடி20 (கனடா), யுரோ டி20 ஸ்லாம் (ஹாலந்து, அயர்லாந்து) போன்றவற்றில் ஆட அவர் திட்டமிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே இர்பான் பதான் கரிபீயன் ப்ரீமியர் லீக் போட்டி வீரர்கள் தொகுப்பில் இடம் பெற்றிருந்தார். ஆனால் அவரிடம் தனது பெயரை விலக்கிக் கொள்ள வேண்டும் என பிசிசிஐ கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com