இரண்டாவது உலகக் கோப்பையில் பாக். அணியும்-மே.இ.தீவுகளும் மோதின. முதலில் ஆடிய மே.இ.தீவுகள் 293-6 ரன்களை குவித்தது.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியின் ஜாகீர் அப்பாஸ்-மஜித் கான் சிறப்பாக ரன்களை குவித்தனர்.
ஆன்டி ராபர்ட்ஸ்-ஹோல்டிங் ஆகியோரின் அதிரடி பந்துவீச்சை இருவரும் சிதறடித்தனர். இதனால் மே.இ.தீவுகள் கேப்டன் கிளைவ் லாயிட் திணறினார்.
பின்னர் ஜாகீர் அப்பாஸூக்கு சாதகமாக பந்துவீசுவதை மாற்ற முடிவு செய்து ஆஃப் ஸ்டம்பில் இருந்து லெக் ஸ்டம்பு திசையில் பந்துவீசுமாறு கூறினார்.
பந்துவீச்சாளர் காலின் கிராப்ட் இதை பின்பற்றி வீசிய போது, தவறாக கணித்த ஜாகீர் அப்பாஸ் அவுட்டாகி வெளியேறினார். இதனால் பாக்.அணி கோல்வியைத் தழுவியது.