இத்தாலி ஓபன்: நடால், பிளிஸ்கோவா சாம்பியன்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றார்.
இத்தாலி ஓபன்: நடால், பிளிஸ்கோவா சாம்பியன்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றார்.
அதே நேரத்தில் ஆடவர் பிரிவு இறுதிச் சுற்றில் உலகின் முன்னணி வீரர்கள் ஜோகோவிச்}நடால் ஆகியோர் மோதினர்.  
உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை 6}0 என முதல் செட்டில் நடால் வீழ்த்தினார். இரண்டாவது செட்டை 4}}6 என போராடி வென்றார் ஜோகோவிச். மூன்றாவது செட்டையும் 6}1 என எளிதாக தன் வசப்படுத்தி பட்டம் வென்றார் நடால். இது அவர் வெல்லும் 9}ஆவது இத்தாலி ஓபன் பட்டமாகும்.
மகளிர் பிரிவில் பிளிஸ்கோவா சாம்பியன்: ஞாயிற்றுக்கிழமை மாலை பிரிட்டனின் ஜோஹன்னாகொண்டாவுக்கும்}பிளிஸ்கோவாவுக்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் முதல் செட்டில் 6}3, 6}4 என்ற நேர் செட்களில் கொண்டாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் பிளிஸ்கோவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com