டி20 மும்பை கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ரூ. 5 லட்சத்துக்குத் தேர்வாகியுள்ளார்.
மும்பை கிரிக்கெட் சங்கத்தின் டி20 மும்பை கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் இன்று நடைபெற்றது. இதில் ஆகாஷ் டைகர்ஸ் அணி, அர்ஜூன் டெண்டுல்கரை ரூ. 5 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது.
மும்பை வீரர்களான சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், பிரிதிவ் ஷா போன்றோரும் டி20 மும்பை போட்டியில் இடம்பெற்றுள்ளார்கள்.
8 அணிகள் பங்குபெறும் டி20 மும்பை போட்டி, மும்பையில் மே 14 அன்று தொடங்கவுள்ளது.