ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன்: பி.வி.சிந்து வெளியேற்றம்

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.
பாட்மிண்டன் உலகில் மிகவும் பிரபலமான போட்டியான ஆல் இங்கிலாந்து சாம்பியன் போட்டி பர்மிங்ஹாமில் புதன்கிழமை தொடங்கியது. இந்தியா சார்பில் இதில் பட்டம் வென்று 18 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் பி.வி.சிந்து, சாய்னா நெவால், கே.ஸ்ரீகாந்த் ஆகியோர் பட்டம் வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிந்து தனது முதல் சுற்று ஆட்டத்தில் தென்கொரியாவின் சுங் ஜி ஹியுனை எதிர்கொண்டார்.
முதல் கேமை 16-21 என இழந்த நிலையில், அடுத்த கேமை 22-20 என சிந்து போராடி வென்றார். கடைசி கேமில் ஆதிக்கம் செலுத்திய சுங் ஜி 18-21 என சிந்துவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். கடந்த டிசம்பர் மாதம் வேர்ல்ட் சீரிஸ் பைனல் சாம்பியன் பட்டம் வென்ற சிந்து இதில் முதல் சுற்றிலேயே தோற்று விட்டார்.
ஆடவர் பிரிவில் சாய் பிரணீத் 21-19, 21-19 என சக வீரர் எச்எஸ்.பிரணாயை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com