ரஹானேவுக்குக் காயம்: டி20 போட்டியிலிருந்து விலகினார்!

ரஹானே குறித்த இந்தத் தகவல் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணிக்கு நிச்சயம் கவலையை ஏற்படுத்தும். அந்த அணியின் கேப்டனாக...
ரஹானேவுக்குக் காயம்: டி20 போட்டியிலிருந்து விலகினார்!

காயம் காரணமாக சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலிருந்து பிரபல வீரரும் மும்பை அணி கேப்டனுமான ரஹானே விலகியுள்ளார்.

குரூப் சி பிரிவில் முதல் இடத்தைப் பிடித்த மும்பை அணி, நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. எனினும் ரஹானே மொத்தமாக 58 ரன்களே எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி - 9.67.

லீக் சுற்றுகளின்போது ரஹானேவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நாக் அவுட் சுற்றுகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என மும்பை அணியின் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார். 

ரஹானே குறித்த இந்தத் தகவல் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணிக்கு நிச்சயம் கவலையை ஏற்படுத்தும். அந்த அணியின் கேப்டனாக ரஹானே உள்ளார். ஐபிஎல் போட்டி மார்ச் 23 அன்று சென்னையில் தொடங்கவுள்ளது. ராஜஸ்தான் அணி, மார்ச் 25 அன்று ஜெய்பூரில் பஞ்சாப் அணிக்கு எதிராகத் தனது ஐபிஎல் ஆட்டத்தைத் தொடங்கவுள்ளது. அதற்குள் ரஹானே முழு உடற்தகுதியை அடைந்துவிடுவாரா என்பது இனிமேல் தான் தெரியவரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com