மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா, உலகக் கோப்பையை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக மும்பைக்கு வந்தடைந்தார்.
இந்நிலையில் பிரையன் லாராவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் உடனடியாக, மும்பையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் செவ்வாய்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆன்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது லாரா நலமுடன் இருப்பதாகவும், ஒருநாள் ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் மருத்துவப் பரிசோதனைகள் செய்தவுடன் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாம்பவான் வீரர் பிரையன் லாரா, கடந்த மே 2-ஆம் தேதி தனது 50-ஆவது பிறந்தநாளை இந்தியாவில் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.