இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார் இந்தியாவின் நட்சத்திரம் பி.வி.சிந்து.
இன்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில், சீனாவின் 21 வயது சென் யு ஃபெயை எதிர்கொண்டார் சிந்து. இதில் 21-19, 21-10 என வென்று இந்த வருடத்தில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார்.
இறுதிச்சுற்றில் ஜப்பானின் யமகுச்சிக்கு எதிராக மோதவுள்ளார் சிந்து.