2-ஆவது சூப்பர் ஓவரின் மூலம் முடிவை நிர்ணயித்திருக்கலாம்: சச்சின் டெண்டுல்கர்

 பவுண்டரிகளுக்கு பதிலாக 2-ஆவது சூப்பர் ஓவரின் மூலம் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் முடிவை நிர்ணயித்திருக்கலாம் என ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
2-ஆவது சூப்பர் ஓவரின் மூலம் முடிவை நிர்ணயித்திருக்கலாம்: சச்சின் டெண்டுல்கர்


 பவுண்டரிகளுக்கு பதிலாக 2-ஆவது சூப்பர் ஓவரின் மூலம் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் முடிவை நிர்ணயித்திருக்கலாம் என ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பெரிய போட்டிகளில் இதுபோன்ற கையாள முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், பவுண்டரிகளுக்கு பதிலாக கூடுதல் சூப்பர் ஓவரை வீசுமாறு செய்திருக்கலாம்.
சாம்பியனை முடிவு செய்ய அதிக பவுண்டரிகளை அடித்திருக்க வேண்டும் என்ற ஐசிசி விதிக்கு மாறாக 2-ஆவது சூப்பர் ஓவர் முறையை கடைபிடித்திருக்கலாம். கால்பந்தில் கூடுதல் ஆட்ட நேரம் வரை நீண்டு கொண்டே செல்கிறது. உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கான விதிகள் மாற்ற வேண்டுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த நிலையில், அவற்றுக்கு பயன் கிடைக்கும் வகையில் விதிகள் இருக்க வேண்டும்.
5-ஆம் நிலை பேட்ஸ்மேனாக தோனியை நான் சந்தேகமின்றி ஆட அனுப்பி இருப்பேன். ஹார்திக் 6 மற்றும் தினேஷ் 7-ஆவது இடங்களில் ஆடியிருக்க வேண்டும் என்றார் சச்சின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com