மே.இ.தீவுகள் தொடருக்கான  இந்திய அணி தேர்வு: 19-இல் நடக்கிறது

மே.இ.தீவுகள் உடன் நடைபெறவுள்ள தொடருக்கான இந்திய அணித் தேர்வு வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனினும் ஒருநாள் ஆட்டங்களுக்கான அணியில் தோனி இடம் பெறுவாரா என்பது குறித்து தெளிவற்ற
மே.இ.தீவுகள் தொடருக்கான  இந்திய அணி தேர்வு: 19-இல் நடக்கிறது


மே.இ.தீவுகள் உடன் நடைபெறவுள்ள தொடருக்கான இந்திய அணித் தேர்வு வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனினும் ஒருநாள் ஆட்டங்களுக்கான அணியில் தோனி இடம் பெறுவாரா என்பது குறித்து தெளிவற்ற நிலையே நீடிக்கிறது.
வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய-மே.இ.தீவுகள் இடையே அமெரிக்கா மற்றும் மே.இ.தீவுகளில் தலா 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் நடக்கின்றன. ஒருநாள் தொடர் ஆக. 3-இல் தொடங்குகிறது. 
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியின் ஒரு பகுதியாக 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் ஆக. 22-இல் தொடங்குகிறது. 
இதற்கான அணியை தேர்வு செய்ய மத்திய தேர்வாளர் குழு 19-இல் மும்பையில் கூடுகிறது. கேப்டன் கோலி, பந்துவீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு குறுகிய ஓவர்கள் தொடரில் ஓய்வு தரப்படும் எனத் தெரிகிறது.
தோனி சேர்க்கப்படுவாரா?:  அதே நேரம், உலகக் கோப்பையில் விமர்சனத்துக்கு ஆளான மூத்த வீரர் தோனி, மீண்டும் அணியில் இடம் பெறுவாரா என தெளிவற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தோனிக்கும், தேர்வாளர்களுக்கும் இடையே இதுவரை எந்த தகவல் தொடர்பும் இல்லை. தொடர்ந்து ஆட வேண்டுமா இல்லையா என்பது குறித்து தோனி தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் பெருவிரல் முறிவால் சிகிச்சை பெற்று வரும் தொடக்க வீரர் ஷிகர் தவனும் இடம்பெறுவாரா எனத் தெரியவில்லை.
ஏற்கெனவே உள்ளூர் ஆட்டங்களில் இடம் பெறாமல் தோனி, தவன் புறக்கணிப்பதற்கு முன்னாள் வீரர் காவஸ்கர் சாடியிருந்தார். 
உலகக் கோப்பை அணியில் இடம் பெற வீரர்கள் பெரும்பாலோர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றனர். எவரும் ஓய்வு கோரவில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com