பாகிஸ்தானுக்கு 2 புள்ளிகள் தருவதை வெறுக்கிறேன்: சச்சின் டெண்டுல்கர்

உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு 2 புள்ளிகள் தருவதை வெறுக்கிறேன் என ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு 2 புள்ளிகள் தருவதை வெறுக்கிறேன்: சச்சின் டெண்டுல்கர்


உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு 2 புள்ளிகள் தருவதை வெறுக்கிறேன் என ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
புல்வாமா சம்பவம் எதிரொலியாக உலகக் கோப்பையில் அந்நாட்டுடன் ஆடக்கூடாது என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெண்டுல்கர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
வரும் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் ஆடாமல், அதற்கு 2 புள்ளிகளை தருவதை வெறுக்கின்றேன். அத்தகைய முடிவு அவர்களுக்கு தான் சாதகமாக அமையும். போட்டியில் ஆடி, பாகிஸ்தானை வெல்ல வேண்டும் என காவஸ்கர் கூறியதை ஏற்கிறேன். இதுவரை உலகக் கோப்பை ஆட்டங்களில் நாம் வென்றுள்ளோம். அதே போல் இதிலும் பாகிஸ்தானை வெல்ல வேண்டும். எனினும் முதலில் நாடு தான் எனக்கு முக்கியம் என்றார் டெண்டுல்கர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com