உலகக் கோப்பைக்கு பின் ஓய்வு

உலகக் கோப்பைக்கு பின் ஓய்வு

வரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை (2019)க்கு பின் ஒரு நாள் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக மே.இ.தீவுகள் அணியின் அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

வரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை (2019)க்கு பின் ஒரு நாள் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக மே.இ.தீவுகள் அணியின் அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
 இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
 இங்கிலாந்தில் மே முதல் ஜூலை வரை நடக்க உள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கு பின் ஓய்வு பெற உள்ளேன்.
 284 ஒரு நாள் ஆட்டங்களில் மொத்தம் 9727 ரன்களை குவிததுள்ளார். ஜாம்பவான் பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்க இன்னும் 677 ரன்கள் கெய்லுக்கு தேவைப்படுகிறது. கெயில் ஆடவுள்ளது 5-ஆவது உலகக் கோப்பை போட்டியாகும். டி20 ஆட்டங்களில் அதிக ரன்களை குவித்துள்ளார். கடந்த 1999-இல் அறிமுகம் ஆனது முதல்கெயில் பேட்டிங்கில் மொத்தம் 23 ஒரு நாள் சதங்களை அடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com