சென்னை ஓபன் ஏடிபி: இறுதிச் சுற்றில் ஹாரிஸ்-மெளடெட்

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் ஆஸி.வீரர் ஆன்ட்ரு ஹாரிஸ், பிரான்ஸின் மெளடெட் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
சென்னை ஓபன் ஏடிபி: இறுதிச் சுற்றில் ஹாரிஸ்-மெளடெட்

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் ஆஸி.வீரர் ஆன்ட்ரு ஹாரிஸ், பிரான்ஸின் மெளடெட் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்திய நம்பர் ஒன் வீரர் பிரஜ்னேஷ் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
 நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் சனிக்கிழமை ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முதல் ஆட்டத்தில் சசிகுமார் முகுந்ந்தும்-கோரென்டின் மெளடெட்டும் மோதினர். இதில் 6-3, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் முகுந்த் தோல்வியடைந்தார். முதல் செட்டில் முகுந்த் சிறப்பாக ஆடிய போதும், அடுத்தடுத்த செட்களில் சோபிக்கவில்லை.
 பிரஜ்னேஷ் அதிர்ச்சிதோல்வி
 மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன் ஜூனியர் முன்னாள் சாம்பியன் ஹாரிஸ் உடன் பிரஜ்னேஷ் மோதினார். முதல் செட்டில் 6-4 என வீழ்ந்த பிரஜ்னேஷ் பின்னர் சுதாரித்துக் கொண்டு இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்தி 6-3 என கைப்பற்றினார். ஆனால் கடைசி செட்டில் ஹாரிஸ் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி 6-0 என செட்டை கைப்பற்றினார்.
 இதன் மூலம் அரையிறுதியோடு இந்தியாவின் பங்கேற்பு முடிந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடக்கவுள்ள இறுதிச் சுற்றில் ஹாரிஸ்-மெளடெட் மோதுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com