துரந்து கோப்பை கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த மோகன் பகான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கோகுலம் கேரளா எஃப்சி அணி.
ஆசியாவின் பழமையான கால்பந்து போட்டிகளில் ஒன்றான துரந்து கோப்பை 129-வது போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி ஆட்டம் சால்ட்லேக் மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. உள்ளூர் அணியான மோகன் பகான்-ஐ லீக் அணியான கோகுலம் கேரளாவை எதிர்கொண்டு ஆடியது.
தொடக்கம் முதலே கேரளா அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில், அதன் வீரர் மார்கஸ் ஜோசப் அற்புதமாக ஆடி 2 கோல்களை அடித்தார். மோகன் பகான் தரப்பில் ஜோசப் பெட்டியா ஆறுதல் கோலடித்தார். இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் கேரள அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் 17-ஆவது முறையாக துரந்து கோப்பையை வெல்லும் மோகன் பகான் கனவு பொய்த்துப் போனது.