உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தொடர்ந்து 3-ஆவது முறையாக தகுதி பெற்றுள்ளார் இந்திய முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து.
ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனை சீனாவின் சென் யுபெயை 21-7, 21-14 என்ற செட் கணக்கில் 40 நிமிடங்களில் எளிதாக வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார் சிந்து. ஏற்கெனவே அவர் கடந்த 2 உலக சாம்பியன் போட்டிகளிலும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஜப்பானின் ஒகுஹராவை எதிர்கொள்கிறார். முதல் தங்கம் வெல்வாரா சிந்து என பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.