புரோ கபடி லீக் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் புணேரி பல்தான் அணி 31-23 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 26-28 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் அணியிடம் போராடி தோற்றது.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் புதன்கிழமை இரவு நடைபெற்ற 5-ஆம் கட்ட லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி ஆதிக்கம் செலுத்தின. முதல் பாதி ஆட்ட நிறைவில் 10-10 என சமநிலை ஏற்பட்டது.இறுதியில் 31-23 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது புணே. பெங்களூரு அணியில் ரோஹித் குமார், அமித் ஷிரோன், ஆகியோர் போராடியும் பலனில்லாமல் போய்விட்டது.
தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பேந்தர்ஸ்: இரண்டாவதாக ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்-தமிழ் தலைவாஸ் இடையே நடைபெற்ற ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்தன. இறுதியில் 26-28 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது ஜெய்ப்பூர் பிங் பேந்தர்ஸ்.