புரோ கபடி லீக் போராடி தோற்றது தமிழ் தலைவாஸ்

புரோ கபடி லீக் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் புணேரி பல்தான் அணி 31-23 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை
தமிழ் தலைவாஸ் வீரரை மடக்கும் ஜெய்ப்பூர் வீரரகள்.
தமிழ் தலைவாஸ் வீரரை மடக்கும் ஜெய்ப்பூர் வீரரகள்.


புரோ கபடி லீக் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் புணேரி பல்தான் அணி 31-23 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது.   மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 26-28 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் அணியிடம் போராடி தோற்றது.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் புதன்கிழமை இரவு நடைபெற்ற 5-ஆம் கட்ட லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி ஆதிக்கம் செலுத்தின. முதல் பாதி ஆட்ட நிறைவில் 10-10 என சமநிலை ஏற்பட்டது.இறுதியில் 31-23 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது புணே. பெங்களூரு அணியில் ரோஹித் குமார், அமித் ஷிரோன், ஆகியோர் போராடியும் பலனில்லாமல் போய்விட்டது. 
தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பேந்தர்ஸ்: இரண்டாவதாக ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்-தமிழ் தலைவாஸ் இடையே நடைபெற்ற ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்தன. இறுதியில் 26-28 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது ஜெய்ப்பூர் பிங் பேந்தர்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com