மே.இ.தீவுகள் ஏ அணியுடன் பயிற்சி ஆட்டம்: இந்தியா 297/5

மே.இ.தீவுகள் ஏ அணிக்கு எதிரான 3 நாள்கள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 297/5 ரன்களை எடுத்துள்ளது. புஜாரா 100, ரோஹித் சர்மா 68 ரன்களை விளாசினர்.
மே.இ.தீவுகள் ஏ அணியுடன் பயிற்சி ஆட்டம்: இந்தியா 297/5

மே.இ.தீவுகள் ஏ அணிக்கு எதிரான 3 நாள்கள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 297/5 ரன்களை எடுத்துள்ளது. புஜாரா 100, ரோஹித் சர்மா 68 ரன்களை விளாசினர்.
இந்திய அணி ஏற்கெனவே டி20, ஒருநாள் தொடர்களை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட் ஆட்டங்கள் தொடர் வரும் 22-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு தயாராகும் வகையில் மே.இ.தீவுகள் ஏ அணியுடன் கூலிட்ஜில் நடைபெறும் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது இந்திய அணி.
தொடக்க நாளான சனிக்கிழமை இந்திய அணி 297/5 ரன்களை எடுத்தது.
ரோஹித் சர்மா 68 (1 சிக்ஸர், 8 பவுண்டரி), சேதேஸ்வர் புஜாரா 100 (1 சிக்ஸர், 8 பவுண்டரி), என அபாரமாக ஆடி 132 ரன்களை சேர்த்தனர்.
பின்னர் ரிஷப் பந்த்-ஹனுமா விஹாரி ரன்களை உயர்த்தினர். லோகேஷ் ராகுல் 36, மயங்க் அகர்வால் 12, கேப்டன் ரஹானே 1, பந்த் 33 ரன்களுடன் வெளியேறினர்.
ஆட்ட நேர முடிவில் 88.5 ஓவர்களில் 297/5 ரன்களை எடுத்தது இந்தியா. விஹாரி 37, ஜடேஜா 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர். மே.இ.தீவுகள் ஏ தரப்பில் ஜோனத்தான் கார்ட்டர் 3-39 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com