சின்சினாட்டி மாஸ்டர்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டி அரையிறுதி ஆட்டத்தில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச். இறுதிச் சுற்றில் மெத்வதேவ்-கோபின் மோதுகின்றனர்.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற அரையிறுதியில் மெத்வதேவ் 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் 16-ஆம் நிலை வீரர் டேவிட் கோபின் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ரிச்சர்ட் கேஸ்கட்டை வீழ்த்தினார்.
மகளிர் பிரிவு: ரஷிய வீராங்கனை வெட்லனா குஸ்நெட்úஸாவா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் 2-ஆம் நிலை வீராங்கனை ஆஷ்லி பர்டியை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் மடிஸன் கீய்ஸ் 7-5, 6-4 என சோபினா கெனினை வென்றார். இறுதிச் சுற்றில் வெட்லனா-மடிஸன் கீய்ஸ் மோதுகின்றனர்.