மே.இ.தீவுகள்- ஏ அதிகாரபூர்வமற்ற டெஸ்ட்: தொடரைக் கைப்பற்றியது இந்தியா

மே.இ.தீவுகள் ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது இந்திய ஏ அணி.
மே.இ.தீவுகள்- ஏ அதிகாரபூர்வமற்ற டெஸ்ட்: தொடரைக் கைப்பற்றியது இந்தியா

மே.இ.தீவுகள் ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது இந்திய ஏ அணி.
இரு அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடர் 3-ஆவது ஆட்டம் டரோபாவில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 201 ரன்களுக்கும், மே.இ.தீவுகள் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன் தொடர்ச்சியாக இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி ஷுப்மன்கில்லின் (204) அபார இரட்டை சதத்தால் 365/4 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.
373 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணியால் 314/6 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியில் 
ஜெரேமி சோலோசனோ 92, பிராண்டன் கிங் 77, சுனில் அம்ப்ரிஸ் 69 ரன்களை எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஷபாஸ் நதீம் 5-103 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
ஏற்கெனவே 2 டெஸ்ட் ஆட்டங்களில் வென்ற நிலையில் 2-0 என தொடரை கைப்பற்றியது இந்திய ஏ அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com