டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை விளையாட்டில் ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.
தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ், ஆர்.ஓ.சி.யைச் சேர்ந்த உலகின் நெ.2 வீரரான கால்சனுடன் முதலில் மோதினார். இதில் 6-0 என வெற்றி கண்டு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அவர் முன்னேறினார்.
அடுத்த ஆட்டத்தில் உலகின் நெ. 1 வீரரான பிராடி எல்லிசனுடன் மோதினார் பிரவீன் ஜாதவ். இதில் 0-6 என்கிற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார்.