ஒலிம்பிக்ஸ்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: ஈட்டி எறிதலில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா (விடியோ)

DIN

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

இன்று நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே 86.65 மீ. தூரம் எறிந்து இறுதிச்சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றார். 

எனினும் மற்றொரு இந்திய வீரரான ஷிவ்பால் சிங், 80 மீ. தூரத்தை எட்டாததால் அவர் தகுதிச்சுற்றில் தோல்வியடைந்தார். அவர் அதிகபட்சமாக 76.40 மீ. தூரம் வீசினார். 

23 வயது நீரஜ் சோப்ராவுக்கு இது முதல் ஒலிம்பிக் போட்டி. தகுதிச்சுற்றில் அதிகத் தூரம் வீசியவரும் அவர் தான். 2017 உலக சாம்பியன் ஜோஹன்னஸ் வெட்டரை விடவும் அதிகத் தூரம் வீசியுள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேற தகுதிச்சுற்றில் 83.50 மீ. தூரம் வீசவேண்டும், அல்லது அதிகத் தூரம் வீசிய முதல் 12 பேரில் ஒருவராக இருக்கவேண்டும். 

இறுதிச்சுற்று சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT