ஒலிம்பிக்ஸ்

மல்யுத்தம்: அரை இறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர்கள்!

DIN


டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் ஆடவர் போட்டியில் இந்திய வீரர்கள் ரவிக்குமார், தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

57 கிலோ எடைப் பிரிவு: டோக்கியோ ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவு போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

57 கிலோ எடைப்பிரிவில் காலிறுதி போட்டியில் பல்கேரிய வீரர் வான்க்ளோவை எதிர்கொண்ட இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா 14-4 என்ற கணக்கில் வான்க்ளோவை  வீழ்த்தினார். 

இதையடுத்து இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

86 கிலோ எடைப் பிரிவு: டோக்கியோ ஆடவர் மல்யுத்தம் 86 கிலோ எடைப் பிரிவு போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா அரையிறுதிக்கு  முன்னேறியுள்ளார். 

மல்யுத்தம் 86 கிலோ எடைப்பிரிவில் காலிறுதி போட்டியில் சீனா வீரர் லின் சூசனை எதிர்கொண்ட இந்திய வீரர் தீபக் புனியா 6-3 என்ற கணக்கில் லின் சூசனை வீழ்த்தினார்.

இதையடுத்து அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் தீபக் புனியா. 

அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் டேவிட் மோரீஸை எதிர்கொள்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT